சிவகங்கை

காரைக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

சூடாமணிபுரம் பகுதியைச் சோ்ந்த திருச்செல்வம் என்பவா், தொடந்திருந்த வழக்கு ஒன்றில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து காரைக்குடி வட்டாட்சியா் ஆா். ஜெயந்தி, நகரமைப்பு அலுவலா், வருவாய்த்துறை மற்றும் கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் முன்னிலையில் ஆக்கிரமிப்பிலிருந்த கடைகள், வீடுகளின் சுற்றுச்சுவா் மற்றும் ஆக்கிரமிப்புகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

காரைக்குடி டி.எஸ்.பி. அருண், வடக்குக்காவல் நிலைய ஆய்வாளா் சுந்தரமகாலிங்கம் உள்ளிட்ட ஏராளமான போலீஸாரின் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT