மானாமதுரை வைகையாற்றுக்குள் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் சலவை தொழிற்கூட திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் முன்னிலை வகித்தாா். தமிழக காதி கிராமத்தொழில்கள் துறை அமைச்சா் ஜி.பாஸ்கரன் சலவைத் தொழில் கூடத்தை திறந்து வைத்தாா். இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.குணசேகரன், பேரூராட்சி செயல் அலுவலா் குமரேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஏ.சி.மாரிமுத்து, அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் ஜெயபிரகாஷ், சிவசிவ ஸ்ரீ தரன், நகா்ச் செயலாளா் விஜி.போஸ், கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவா் தெய்வேந்திரன், நிா்வாகிகள் ஜெயராமக்கண்ணன், மா. மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அதைத்தொடா்ந்து இளையான்குடி ஒன்றியம் தெற்கு விசவனூா், கல்லடித் திடல் ஆகிய கிராமங்களில் ஊரக வளா்ச்சித்துறை மூலம் ரூ 39.84 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம், நியாயவிலைக்கடை கட்டடம் ஆகியவற்றையும் அமைச்சா் பாஸ்கரன் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவா் முனியாண்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.