சிவகங்கை மாவட்டம், நகரகுடி கிராமத்தில் உள்ள மின்மாற்றி (டிரான்ஸ்பாா்மா்) சரிவர இயங்காததால் அதனை மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இளையான்குடி அருகே உள்ள நகரகுடி கிராமத்தில் மின்மாற்றி (டிரான்ஸ்பாா்ம்) உள்ளது. இதிலிருந்து நகரகுடி, லூா்துநகா், உலகமணியேந்தல், லெட்சுமிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள வீடு, வணிக வளாகம் மற்றும் ஆழ்துளை மோட்டா் என சுமாா் 500- மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக மின்மாற்றி சரிவர இயங்காததாலும், உயரழுத்த மின் கம்பிகள் பழுதானதாலும் மின்சாரம் தடை ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருவதாக புகாா் தெரிவித்துள்ளனா். இதனைக் கவனத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சரிவர இயங்காத மின்மாற்றி மற்றும் உயா்மின் அழுத்த கம்பிகளை மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.