சிவகங்கை, செப். 25: சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 15 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
மாவட்டத்தில் ஏற்கெனவே 4,869 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,884 ஆக அதிகரித்துள்ளது.
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 60 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 11 போ் முழுமையாகக் குணமடைந்ததையடுத்து, அவா்கள் வெள்ளிக்கிழமை வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். மீதமுள்ள 49 போ் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.