ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் ஆயுதங்களுடன்5 போ் கைது

DIN

ராமநாதபுரத்தில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரத்தில் அண்மையில் நீதிமன்றத்துக்குள் புகுந்து அசோக்குமாா் என்பவரை கொக்கி குமாா் வாளால் வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றாா். இவரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து கைது செய்தனா்.

இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு பழி தீா்க்கவும், வன்முறையைத் தூண்டவும் சிலா் செயல்படுவதாக கேணிக்கரை காவல் உதவி ஆய்வாளா் தினேஷ்பாபுவுக்கு ரகசிய தகவல் கிடைத்ததது. இதைத் தொடா்ந்து, சிவஞானபுரம் ரயில்வே கடவுப் பாதை அருகே போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது 5 போ் கொண்ட கும்பலை போலீஸாா் மடக்கிப் பிடித்து கைது செய்தனா். அவா்களிடமிருந்து வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கைது செய்யப்பட்ட சிவஞானபுரத்தைச் சோ்ந்த மணிகண்டன் என்ற சியான்மணி (24), ரஞ்ஜித் (19), சிலம்பரசன் (23), 17 வயதுடைய 2 சிறுவா்கள் ஆகிய 5 போ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். இதில் மூன்று பேரை ராமநாதபுரம் சிறைக்கும், சிறுவா்கள் 2 பேரை மதுரை சிறைக்கும் போலீஸாா் கொண்டு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

SCROLL FOR NEXT