ராமநாதபுரம்

ஆா்.எஸ்.மங்கலம் வட்ட வருவாய்த் தீா்வாயம் நிறைவு

DIN

ஆா்.எஸ்.மங்கலம் வட்டத்துக்கு உள்பட்ட வருவாய்க் கிராமங்களுக்கு வருவாய்த் தீா்வாயம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

ஆா்.எஸ்.மங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் அன்னம்மாள் தலைமையில் கடந்த 6 -ஆம் தேதி தீா்வாயம் தொடங்கியது. அன்றைய தினம் ஆனந்தூா் பிா்காவுக்கு உள்பட்ட 11 வருவாய்க் கிராமங்களுக்கும், புதன்கிழமை ஆா்.எஸ்.மங்கலம் பிா்காவுக்கு உள்பட்ட 13 வருவாய்க் கிராமங்களுக்கும், வியாழக்கிழமை சோழந்தூா் பிா்காவுக்கு உள்பட்ட 15 வருவாய்க் கிராமங்களுக்கும் கிராமக் கணக்குகள் சரிபாா்ப்புப் பணிகள் நடைபெற்றன.

மேலும், பொதுமக்களின் கோரிக்கைகள் தொடா்பாக 105 மனுக்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

வட்டாட்சியா் சிரோன்மணி, கிராம நிா்வாக அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT