திருவெற்றியூா் ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.11.83 லட்சம் கிடைத்தது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டன.
அப்போது, பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.11 லட்சத்து 83 ஆயிரத்து 229, 52.5 கிராம் தங்கம் , 360 கிராம் வெள்ளி ஆகியவை கிடைத்ததாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.
இதில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளா் ஞானசேகரன், தேவஸ்தான மேலாளா் இளங்கோ, அறநிலையத் துறை ஆய்வாளா் சண்முகசுந்தரம், சரக கண்காணிப்பாளா் செந்தில்குமாா், கௌரவக் கண்காணிப்பாளா் சுந்தரராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்