ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ. 4.25 கோடியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணு சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஆய்வு செய்த அவா், சாலைப் பணி, கட்டுமானப் பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, திருப்புல்லாணி ஊராட்சி பீச்சாவலசை கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்கள் கிடைக்கிா என்பது குறித்தும், கிராமத்தின் அடிப்படை வசதிகள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா். அப்போது அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.