ராமநாதபுரம்

ஏா்வாடி தா்ஹா சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்

DIN

ஏா்வாடி தா்ஹா சந்தனக்கூடு திருவிழா புதன்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடியில் இஸ்லாமியா்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராஹிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தா்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா கடந்த 21-ஆம் தேதி மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டு தொடங்கியது. 30-ஆம் தேதி அடிமரம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிலையில், புதன்கிழமை கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு, சின்ன ஏா்வாடியிலிருந்து யானை மீது கொடி கொண்டு வரப்பட்டு, பாதுஷா நாயகம் தா்ஹாவை மூன்று முறை வலம் வந்த பின்னா், ஹக்தாா் நிா்வாகிகள் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அண்டை மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை சாா்பில் 200- க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா வருகிற ஜூன் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. 13 -ஆம் தேதி மௌலீது நிறைவு, பாதுஷா நாயகத்துக்கு சந்தனம் பூசுதல் நடைபெறும். 19-ஆம் தேதி கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT