வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, பாம்பன் துறைமுகத்தில் திங்கள்கிழமை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், இந்த புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. மேலும், மன்னாா் வளைகுடா, பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் பாதுகாப்புடன் மீன்பிடிக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியது.