ராமநாதபுரத்தில் ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சாா்பில் 6 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ். பிரான்சிஸ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எம். அய்யாத்துரை, மாவட்ட துணைத் தலைவா் முருகவேல், மாவட்டத் தலைவா் (சி.ஐ.டி.யு) எஸ்.ஏ. சந்தானம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், கிராம ஊராட்சியில் பணியாற்றும் ஓ.எச்.டி. ஆப்ரேட்டா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊராட்சிகளில் அரசின் உத்தரவை அமல்படுத்த மறுக்கும் ஊராட்சி மன்றச் செயலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கட்டுமான தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் வாசுதேவன் நன்றி கூறினா். ஆா்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பங்கேற்றனா்.