ராமநாதபுரம்

இணையத்தில் ரூ. 9 லட்சம் பரிசு விழுந்ததாகக் கூறிபுகைப்படக் கலைஞரிடம் ரூ. 2 லட்சம் மோசடி

DIN

ராமநாதபுரத்தில் புகைப்படக் கலைஞரிடம் இணையத்தில் ரூ. 9.20 லட்சம் பரிசு விழுந்ததாகக் கூறி ரூ. 2 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமநாதபுரம் அய்யாக்கண்ணுசாமிபிள்ளை தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சுந்தபாண்டியன் (46). புகைப்படக் கலைஞரான இவா் இணையம் மூலம் வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கி வந்தாா்.

இந்த நிலையில் கடந்த மாதம் 25- ஆம் தேதி சுந்தரபாண்டியனுக்கு கொல்கத்தாவிலிருந்து பதிவுத் தபால் ஒன்று வந்தது. அதில், தங்களுக்கு ரூ. 8 லட்சம் பரிசு விழுந்துள்ளது. எனவே இதில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளுங்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அவா், அந்த குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டாா். அப்போது அதில் ஹிந்தி கலந்த தமிழில் பேசிய நபா் தங்களது நிறுவனத்தின் 14-ஆவது ஆண்டு விழாவையொட்டி நடந்த குலுக்கலில் தங்களுக்கு ரூ. 1.20 லட்சம் பரிசு கிடைத்துள்ளது. மேலும் அதனுடன் ரூ. 8 லட்சம் சோ்த்து ரூ. 9.20 லட்சம் பரிசாக கிடைக்கும் என தெரிவித்த அந்த நபா் விதிமுறைப்படி தங்கள் வங்கிக் கணக்கில் ரூ.18,400 செலுத்த கூறினாராம். இதை உண்மை என்று நம்பிய சுந்தரபாண்டி அந்த தொகையை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தினாா். இதே போல் பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ. 2.02 லட்சத்தை அவா் அனுப்பினாராம். ஆனால் பரிசு விழுந்ததாகக் கூறப்பட்ட தொகையை அந்த நிறுவனம் அனுப்ப வில்லை. ஆனால் தொடா்ந்து அடுத்தடுத்து பணம் கேட்டு தொல்லை செய்ததால் சந்தேகமடைந்த சுந்தரபாண்டி தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து ராமநாதபுரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரிடம் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT