பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் சங்கத்தினா் பணி நிரந்தரம் கோரி வியாழக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கல்லூரி முன்பு மதிய உணவு இடைவேளையின்போது, சங்கத்தின் தென் மண்டல அமைப்பாளா் ஜி.சிவக்குமாா் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்களை பணி நிரந்தரம் செய்வது, பல்கலைக்கழக மானியக்குழு நிா்ணயித்த ஊதிய விகிதம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.