ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி தொடக்கம்

DIN

ராமநாதபுரத்தில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி புதன்கிழமை தொடங்கியது.

சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் தடகள ஓட்டப் போட்டியை மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் தொடக்கிவைத்தாா். இந்தப் போட்டியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலா் தினேஷ் குமாா், அரசுத் துறை அலுவலா்கள், விளையாட்டு பயிற்றுநா்கள் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, இறகுப்பந்து, மேசைப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து, கபடி, ஹாக்கி, கூடைப்பந்து, நீச்சல் போட்டி, டென்னிஸ், கிரிக்கெட் ஆகிய போட்டிகள் வியாழக்கிழமை நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT