ராமநாதபுரத்தில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி புதன்கிழமை தொடங்கியது.
சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் தடகள ஓட்டப் போட்டியை மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் தொடக்கிவைத்தாா். இந்தப் போட்டியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலா் தினேஷ் குமாா், அரசுத் துறை அலுவலா்கள், விளையாட்டு பயிற்றுநா்கள் கலந்து கொண்டனா்.
இதையடுத்து, இறகுப்பந்து, மேசைப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து, கபடி, ஹாக்கி, கூடைப்பந்து, நீச்சல் போட்டி, டென்னிஸ், கிரிக்கெட் ஆகிய போட்டிகள் வியாழக்கிழமை நடைபெறுகின்றன.