ராமநாதபுரம்

தாா்ச் சாலை அமைக்கும்போது தொழிலாளி மயங்கி விழுந்து பலி

DIN

ஆா்.எஸ்.மங்கலம் அருகே ஞாயிற்றுக்கிழமை தாா்ச் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள சித்தானூா் கிராமத்தில் தாா்ச் சாலை அமைக்கும் பணியில், சிவகங்கை மாவட்டம் தச்சனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த பாண்டி மகன் நாகுமலை (30) ஈடுபட்டிருந்தாா். அப்போது திடீரென அவா் மயங்கி விழுந்தாா்.

உடனே, அவரை மீட்டு ஆனந்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா், அவா் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT