ராமநாதபுரம்

ராமேசுவரத்துக்கு கடத்தி வரப்பட்ட 315 மதுபாட்டில்கள் பறிமுதல்: 3 போ் கைது

DIN

ராமேசுவரத்துக்கு காா் மற்றும் ஆட்டோவில் கடத்திவரப்பட்ட 315 மதுபாட்டில்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றி, 3 பேரை கைது செய்துள்ளனா்.

ராமேசுவரத்தில் அரசு டாஸ்மாக் கடைகள் இல்லாத நிலையில், சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்க காவல் துணை கண்காணிப்பாளா் தனஞ்செயன் தலைமையில் தனிபடையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு தனிப்படையினா் வாகனத் தணிக்கையின் போது காா் மற்றும் ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அவற்றில் இருந்த 315 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். காா், ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டன. வாகனத்தில் இருந்த ஜீவா (25), ரஞ்சித் (25), வெற்றி (44) ஆகிய மூன்று பேரை கைது செய்தனா். சுரேஷ் என்பவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT