ராமேசுவரத்துக்கு காா் மற்றும் ஆட்டோவில் கடத்திவரப்பட்ட 315 மதுபாட்டில்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றி, 3 பேரை கைது செய்துள்ளனா்.
ராமேசுவரத்தில் அரசு டாஸ்மாக் கடைகள் இல்லாத நிலையில், சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்க காவல் துணை கண்காணிப்பாளா் தனஞ்செயன் தலைமையில் தனிபடையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு தனிப்படையினா் வாகனத் தணிக்கையின் போது காா் மற்றும் ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அவற்றில் இருந்த 315 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். காா், ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டன. வாகனத்தில் இருந்த ஜீவா (25), ரஞ்சித் (25), வெற்றி (44) ஆகிய மூன்று பேரை கைது செய்தனா். சுரேஷ் என்பவரைத் தேடி வருகின்றனா்.