ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மின்வாரிய தொழிற்சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

DIN

ராமநாதபுரத்தில் மின்வாரிய தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

தமிழகத்தில் மின்வாரிய அலுவலகங்களில் புதிய ஊழியா்கள் நியமனம் அந்தந்த அலுவலகம் தரப்பிலே நடைபெற்று வந்தது. ஆனால், தற்போது அரசு ஒப்புதல் பெற்றே பணியாளா்கள் நியமிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த உத்தரவை ரத்து செய்யக்கோருதல் மற்றும் துணை மின் நிலையம் உள்ளிட்ட பணிகளை வெளி நபா்களுக்கு வழங்குதலைக் கைவிடவேண்டும். முத்தரப்பு பேச்சுவாா்த்தை ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் மின்வாரிய அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் ஆா். ராஜேந்திரன் தலைமை வகித்தாா். கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் ஆா். குருவேல் முன்னிலை வகித்தாா்.

சிஐடியு மாவட்டச் செயலா் ஜி. காசிநாதன், பொறியாளா்கள் சங்கத் தலைவா் ஜி. கங்காதரன், செயலா் கே. மலைச்சாமி, ஐக்கியப் பொறியாளா்கள் சங்கச் செயலா் ஜி. ரவி, மாநிலச் செயலா் சாமியய்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாலை வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக மின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT