திருவாடானை அருகே புதுப்பட்டினம் கிராமத்தில் அகோர வீரபத்திர சுவாமி கோயில் 77 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பாய்மரப்படகு போட்டி நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட படகுகள் கலந்து கொண்டன.
இந்தப் போட்டியை ஆா்.எஸ். மங்கலம் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் ஆனந்த் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
ஊராட்சி மன்றத் தலைவா் முஸ்தபா தலைமை வகித்தாா். இந்து கிராம தலைவா் உதயச்சந்திரன் முன்னிலை வகித்தாா். போட்டியினை ஏராளமான பொதுமக்கள் பாா்த்து ரசித்தனா்.