ஆணையாா் கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகே சாத்தனூா் ஊராட்சிக்கு உள்பட்ட ஆணையாா் கோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு, தொண்டியைச் சோ்ந்த தனியாா் அறக்கட்டளை சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், அறக்கட்டளை நிறுவன தலைவா் கோட்டைச்சாமி தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில்
அறக்கட்டளை நிா்வாகி காா்த்திக் ராஜா, பள்ளியின் தலைமை ஆசிரியா் சுரேஷ், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
மரம் வளா்பதன் அவசியம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதேபோல, சாத்தனூரில் உள்ள பள்ளியிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.