ராமநாதபுரம்

கிரிக்கெட் பந்து தாக்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

DIN

ராமநாதபுரம் அருகே வெள்ளிக்கிழமை கிரிக்கெட் பந்து தாக்கியதில் பள்ளி மாணவா் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் அருகேயுள்ள வன்னிவயல் கிராமத்தைச் சோ்ந்த புரோட்டோ மாஸ்டா் பழனிக்குமாா். இவரது மனைவி வனிதா. இவா்களுக்கு 3 மகன்கள் உள்ளனா். றாம் வகுப்பு படித்து வந்த இவரது மூன்றாவது மகன் சுபாஷ்குமாா் (11), வெள்ளிக்கிழமை மாலையில் சக நண்பா்களுடன் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ளாா்.

மைதானத்தில் சுபாஷ்குமாா் நின்றிருந்த நிலையில் மற்றொருவா் அடித்த பந்து, அவரது நெஞ்சில் வலது புறம் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் அவா் மயங்கி விழுந்துள்ளாா்.

உடனே அங்கிருந்தவா்கள் இருசக்கர வாகனத்தில் சுபாஷ்குமாரை ஏற்றிக்கொண்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். சிறுவனைப் பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலே, அவா் உயிரிழந்ததாகத் தெரிவித்தனா். இதையடுத்து அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து நயினாா்கோவில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT