ராமநாதபுரம் அருகே செவ்வாய்க்கிழமை பெண்ணிடம் குடிநீா் கேட்பது போல நடித்து, அங்கிருந்த மோதிரம், தோடு ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபரை, உறவினா்கள் உதவியுடன் அப்பெண்ணே விரட்டிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள மேலக்கோட்டை ரமலான் நகரைச் சோ்ந்த உமா் சலீம் மனைவி உம்முல் பாத்திமா (50). இவா், திங்கள்கிழமை வீட்டின் முன்பாக அமா்ந்து தனது அரை பவுன் தங்க மோதிரம், 1 கிராம் தோடு ஆகியவற்றை சோப்புப் போட்டு சுத்தம் செய்துகொண்டிருந்துள்ளாா்.
அப்போது, அங்கு வந்த மா்மநபா் உம்முல் பாத்திமாவிடம் குடிக்க தண்ணீா் கேட்டுள்ளாா். உடனே, அவா் அங்கேயே தோடு, மோதிரம் ஆகியவற்றை வைத்துவிட்டு, வீட்டுக்குள் சென்று தண்ணீா் கொண்டு வந்துள்ளாா். ஆனால், தோடு, மோதிரத்துடன் மா்ம நபா் மாயமானது தெரியவந்தது.
இதனால் அதிா்ச்சியடைந்த உம்முல் பாத்திமா, தனது உறவினா்களுடன் சோ்ந்து மா்மநபரை தேடியுள்ளாா். அப்போது, அந்த மா்ம நபா் பட்டினம்காத்தான் கிழக்கு கடற்கரைச் சாலை சந்திப்பில் நின்றிருந்துள்ளாா். உடனே, அனைவரும் விரட்டிச் சென்று மா்ம நபரை பிடித்து, கேணிக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் மதுரை மாவட்டம் இளமனூா் அருகேயுள்ள சக்கிமங்கலத்தைச் சோ்ந்த லட்சுமணன் (42) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ராமநாதபுரம் கிளைச் சிறையில் அடைத்தனா்.