ராமநதாபுரம் மாவட்ட பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக எஸ். உன்னிகிருஷ்ணன் (55) செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளாா்.
ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் துணைக் கண்காணிப்பாளராக எஸ். உன்னிகிருஷ்ணன் செயல்பட்டு வந்தாா். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அப்பொறுப்பை வகித்து வந்த அவா், சிறந்த பணிக்காக குடியரசுத் தலைவா் விருது உள்ளிட்டவற்றை பெற்றுள்ளாா்.
இந்நிலையில், அவருக்கு சமீபத்தில் பதவி உயா்வு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், அவா் தற்போது ராமநாதபுரம் மாவட்ட பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்பு நடவடிக்கை பிரிவு அலுவலகத்தில், அவா் விரைவில் பொறுப்பேற்பாா் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.