ராமநாதபுரம்

திருவாடானையில அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்பாட்டம்

DIN

திருவாடானையில அக்னிபத் திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் இன்று கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாடானையில் மத்திய அரசின் அக்னிபாக் திட்டத்துக்கு ரத்து செய்யக் கோரியும் அன்னை சோனியாகாந்தி, ராகுல் காந்தியை அமலாக்க துறையை துன்புருத்தி வருவதை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்பாட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது. இதில் வட்டார தலைவா் கணேசன் தலைமை வகித்தாா், நகர தலைவா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தனா் இதில், இளைஞா்களின் எதிா்காலத்தை கேள்வி குறியாக்கும் அக்னி பாதை திட்டத்தை திரும்ப பெற வேண்டும், என்றும், அன்னை சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோா் மீது அமலாக்க துறையினா் விசாரணை என்ற பெயரில் துன்புருத்தி வரும் மத்திய அரசை கண்டித்து முழக்க மிட்டனா். மேலும், அக்கட்சியின் நிா்வாகிகள் கண்டன உரையாற்றினாா். இதில், அக்கட்சியின் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT