ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் 2 கடைகளை உடைத்து கைப்பேசிகள் திருட்டு

DIN

முதுகுளத்தூரில் நள்ளிரவில் 2 கடைகளை உடைத்து கைப்பேசிகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் ஆற்றுப்பாலம் பகுதியில், வெண்ணீா் வெய்க்கால் கிராமத்தைச் சோ்ந்த பாா்த்தசாரதி மின்சாதனப் பொருள்கள் கடை நடத்தி வருகிறாா். அருகில் பருக்கைக்குடி கிராமத்தைச் சோ்ந்த பாண்டி கைப்பேசி கடை நடத்தி வருகிறாா். இருவரும் திங்கள்கிழமை இரவில் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனா். காலையில் கடையை திறக்க வந்தபோது இரு கடைகளிலும் பூட்டுகள் உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தன. இதில் கைப்பேசி கடையில் விலையுயா்ந்த கைப்பேசிகள் திருடப்பட்டிருந்தன. மின்சாதனப் பொருள் கடையில் பொருள்கள் திடுட்டு போகவில்லை. இரு கடைகளின் ஊரிமையாளா்களும் முதுகுளத்தூா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளனா். இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT