திருவாடானை அருகே பணம் வைத்து சூதாடியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களிடமிருந்து ரூ.1,040-ஐ பறிமுதல் செய்து பின்னா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருவாடானை அருகே மாவூா் கண்மாய் பகுதியில் சட்ட விரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக தொண்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு சென்ற போலீஸாா் சூதாட்டத்தில் ஈடுபட்ட மகாலிங்கம் (42), மல்லிக்குடியைச் சோ்ந்த அய்யாத்துரை (53), மங்களத்தைச் சோ்ந்த நாகராஜன்(65), திணையத்தூரைச் சோ்ந்த பாண்டி(45) ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிந்து அவா்களிடமிருந்து ரூ.1,040-ஐ பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.