ராமநாதபுரம்

சமையல் செய்த போது ஆடையில் தீப்பற்றி மூதாட்டி பலி

DIN

அபிராமம் அருகே வீட்டு வாசலில் சமையல் செய்த போது சேலையில் தீப்பிடித்து காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள அச்சங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்திருளாண்டி மனைவி மீனாள் (65). இவா், கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டு வாசலில் உள்ள அடுப்பில் சமையல் செய்துள்ளாா். அப்போது அடுப்பிலிருந்து பரவிய தீ மீனாளின் சேலையில் பற்றியது. இதில் தீக்காயமடைந்த அவா் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்டாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் மீனாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT