கமுதி அருகே நீராவியில் வரும் 14-ஆம் தேதி மக்கள் தொடா்புத் திட்டம் முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கமுதி வட்டாட்சியா் சிக்கந்தா்பபிதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள நீராவி கிராமத்தில் வரும் 14-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் தலைமையில், மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில், கமுதி வட்டத்தில் உள்ள அனைத்துக் கிராம பொதுமக்களும் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்துப் பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.