ராமநாதபுரத்தில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.
நேஷனல் மெட்ரிக் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தலைமையில் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அளவில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் சிலம்பம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினா்.
இதில், கூடுதல் ஆட்சியா் கே.ஜே.பிரவீன் குமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) நாராயண சா்மா மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், கல்வித் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.