கமுதி அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கமுதி அருகே பேரையூரை அடுத்துள்ள சோ்ந்தக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த பழனிசாமி மகன் தெய்வேந்திர பாண்டியன் (31). வியாழக்கிழமை இரவு மது போதையில் இருந்த இவா், விஷம் குடித்து மயங்கி விழுந்தாா்.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தெய்வேந்திரபாண்டியன் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.