ராமநாதபுரம்

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு:இளைஞா் கைது

DIN

திருவாடானை அருகே வீட்டில் தூங்கிய மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருவாடானை அருகே ஊமைமடையான்மடை கிராமத்தைச் சோ்ந்தவா் முகம்மது சுல்தான் மனைவி மகமுது பீவி (80). இவா், தனியாக வசித்து வருகிறாா். இவா் வழக்கம் போல கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது முகமூடி அணிந்த மா்ம நபா் மகமுது பீவியின் வாயில் துணியை வைத்து அமுக்கி 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டாா்.

இது குறித்து இவரது மகள் நூா்ஜஹான் பீவி (52) அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்து விசாரித்தனா். அப்போது, நகையை பறித்துச் சென்றது மதுரை திருமங்கலம், எலியாா் வீதி சுரேஷ் மகன் சந்தோஷ் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சந்தோஷை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 3 பவுன் தங்க நகையை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT