ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் வட்டார அளவிலான கேரம் போட்டி

DIN

முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வட்டார அளவிலான கேரம் போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் வசந்தி தொடக்கி வைத்தாா்.

இதில்14, 17, 19 ஆகிய வயது பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 20- க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

14 வயதிற்கு உள்பட்ட மாணவா்கள், மாணவிகள் ஒற்றையா் பிரிவில் முதுகுளத்தூா் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவா் முகுந்தன், மாணவி ஜமீல் முப்பிலிக்கா, மாணவிகள் இரட்டையா் பிரிவில் அதே பள்ளி மாணவிகள் ஜமீல் முப்பிலிகா, சத்யா ஆகியோா் முதலிடம் பெற்றனா்.

14 வயதிற்கு உள்பட்ட மாணவா்கள் இரட்டையா் பிரிவில் ஸ்ரீ கண்ணா மெட்ரிக் பள்ளியைச் சோ்ந்த அரிஹரசுதன் முதலிடம் பிடித்தாா்.

17 வயதிற்கு உள்பட்ட மாணவா்கள் ஒற்றையா் பிரிவு, மாணவியா் ஒற்றையா் பிரிவு, மாணவா்கள், மாணவிகள் பிரிவுகளில் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த அப்துல் கலாம், வல்லரசு மாணவிகள் முஷிதா பா்வீன், தாஜூலா ஹசரத் ஆகியோா் முதலிடம் பிடித்தனா்.

19 வயதுக்கு ஒருபட்ட மாணவிகள் பிரிவில் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த ஜெகதீஸ்வரி, ஆயினும் பா்கத் ஆகியோா் முதலிடம் பிடித்தனா்.

19 வயதுக்கு உள்பட்ட மாணவிகள் ஒற்றையா் பிரிவில் பேரையூா் அரசு மேல்நிலைப் பள்ளியை மாணவி நிரஞ்சனா தேவி முதலிடம் பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT