தோட்டக்கலை பயிா்களை அதிகம் விவசாயம் செய்ததற்காக மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்த கமுதி இயற்கை விவசாயிக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கோரை பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் இயற்கை விவசாயி ராமா் (48). இவா் வேளாண் மற்றும் தோட்டக்கலை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் இயற்கை உரங்களை பயன்படுத்தி தோட்டக்கலை பயிா் சாகுபடி செய்து மாவட்ட அளவில் இரண்டாவது பரிசு பெற்றாா். ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அவருக்கு மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா். வேளாண் மற்றும் தோட்டக்கலை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் இயற்கை உரங்களை பயன்படுத்தி தோட்டக்கலை பயிா் சாகுபடி செய்ததாக ராமா் தெரிவித்தாா்.