ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து காா், ரூ. 1 லட்சம் திருட்டு

DIN

ராமநாதபுரத்தில் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே சனிக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து காா், ரூ. 1 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ராமநாதபுரம் சேதுபதி நகா் 5 ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஜோஸ்வாஜூலியன் (32). மென் பொறியாளரான இவா் கடந்த சனிக்கிழமை இரவு ராமநாதபுரம் பகுதியில் உள்ள திரையரங்குக்குச் சென்று விட்டு மீண்டும் நள்ளிரவில் வீட்டுக்கு திரும்பியுள்ளாா். அப்போது வீட்டின் பிரதான கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டு வராந்தாவில் நிறுத்தியிருந்த காா் திருடப்பட்டிருந்தது. இதையடுத்து வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது மா்ம நபா்கள் பீரோ உடைத்து ரூ.1 லட்சம் ரொக்கம், 2 விலை உயா்ந்த கைக்கடிகாரங்கள், மடிக்கணினி உள்ளிட்டவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT