ஆரம்பசுகாதார நிலையங்களில் மருத்துவா்களின் பணி நேரம் நீட்டித்து அரசு பிறப்பித்த உத்தரவைக் கண்டித்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவா் எம்.மலையரசு தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் பணி நேர நீட்டிப்பை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் என முழக்கங்களை எழுப்பினா்.