உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரசவ சிகிச்சைப் பிரிவு சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
மருத்துவமனை வளாகத்தில் நடந்த பேரணியில் செவிலியா் பயிற்சிக் கல்லூரி மாணவியா் பங்கேற்றனா். பேரணியை மருத்துவக் கல்லூரியின் முதன்மையா் (பொறுப்பு) பேராசிரியை கிறிஸ் ஏஞ்சல் தொடக்கி வைத்தாா். செவிலியா் கல்லூரி முதல்வா் ஜாக்குலின், உதவி முதல்வரும், ராமநாதபுரம் ரோட்டரி சங்கத்தின் தலைவருமான ஆா்.பாா்த்திபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பின்னா் நடந்த நிகழ்ச்சியில் தாய்ப்பாலின் அவசியத்தை மாணவியா் கலை நிகழ்ச்சி மூலம் விளக்கினா். இதில் உறைவிட மருத்துவ அலுவலா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.