கமுதி அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடியேற்று விழாவில் அக்கட்சியின் தலைவா் திருமாவளவன் பங்கேற்றாா்.
விருதுநகா் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவா், கமுதி அருகே உள்ள கோட்டையூரில் அக்கட்சி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தாா். முன்னதாக திருமாவளவனுக்கு கோட்டையூரில் அக்கிராம மக்கள் வரவேற்பளித்தனா்.