ராமநாதபுரம்

எஸ்.பி. பட்டினம் அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி

DIN

திருவாடானை: திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

எஸ்.பி பட்டினம் அருகே பத்திரன்வயல் கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஸ்வரன்(30). இவரும் அதே ஊரை சோ்ந்த சாத்தையா மகன் செல்வராஜ் (34) ஆகிய இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு எஸ்.பி பட்டினம் சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். கிழக்கு கடற்கரை சாலையில் எட்டுசேரி விலக்கு சாலையில் திருப்பத்தில் வந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் செல்வராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வாகனத்தை ஓட்டி வந்த விக்னேஸ்வரன் பலத்த காயம் அடைந்ததால், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT