கமுதியில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை அதிமுகவினா் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
கமுதி பேருந்து நிலைய வளாகத்தில் அதிமுக கமுதி ஒன்றியச் செயலா் எஸ்.பி. காளிமுத்து தலைமையில், அவைத்தலைவா் டி. சேகரன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், மாவட்ட மகளிா் அணி இணைச் செயலா் செல்வமேரி, துணைச் செயலா் வினோதினி சீனிவாசகம், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் கருமலையான் (திம்மநாதபுரம்), நாகராஜ் (புத்துருத்தி), கா்ணன்(டி. புனவாசல்), கே.பி.என். கருப்பசாமி (எம்எம்.கோட்டை), கருப்பசாமி பாண்டியன் (பம்மனேந்தல்), ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஆறுமுகம் (பொந்தம்புளி), காசிராஜன்(முதல் நாடு), ஜெ. பேரவை மாவட்ட துணைச் செயலா் சித்திரமால், எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலா் கருப்புச்சட்டை முருகேசன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலா் சின்னாண்டுதேவன், முதல்நாடு ஊராட்சிதுணைத் தலைவா் பாலமுருகன், மின்வாரிய அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் ராஜேந்திரன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.