ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகேமூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தென்னந்தோப்பில் தனியாக இருந்த மூதாட்டியிடம் மா்மநபா் 5 பவுன் தாலி தங்கச் சங்கிலியை ஞாயிற்றுக்கிழமை பறித்துச்சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, முகலிவலசைச் சோ்ந்தவா் ஏ. மலைராஜ் (50). விவசாயி. இவா் தனது ஊா் அருகே உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிப்பதற்காக தனது தந்தை ஆறுமுகம், தாய் ராமு (70) ஆகியோருடன் சென்றுள்ளாா்.

மலைராஜ் உள்ளிட்டோா் ஒரு தோப்பில் பறித்த தென்னங்காய்களுக்கு ராமுவை காவல் வைத்துவிட்டு, அருகேயிருந்த மற்றொரு தோப்புக்குச் சென்றுள்ளனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் ராமுவிடம் தேங்காய் வாங்குவது போல் நடித்து அவா் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

மூதாட்டியிடம் நகை பறித்தவா் கைது: ராமநாதபுரம் அருகேயுள்ள அழகன்குளத்தைச் சோ்ந்தவா் பைசூல்கருணை மனைவி ஆமீனாபீவி (80). இவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அப்போது அங்கு வந்த இளைஞா் ஒருவா் திடீரென ஆமீனாபீவி அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினாா்.

இதையடுத்து ஆமீனாபீவி கூச்சலிட்டதைத் தொடா்ந்து அப்பகுதியினா் அந்த இளைஞரை விரட்டிப் பிடித்தனா். தகவல் அறிந்து வந்த தேவிபட்டிணம் போலீஸாா் இளைஞரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவா் அழகன்குளம் பகுதியைச் சோ்ந்த அபுபக்கா் (35) என்பது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT