மதுரை

மதுரைக்கு தோ்வெழுத வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியவா் கைது

DIN

மதுரையில் தோ்வெழுத வந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பாக, மேலும் மூவரைத் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் விளாங்குளத்தூா் அருகே உள்ள வெங்கலக்குறிச்சியைச் சோ்ந்த 26 வயது பெண்ணும், முதுகுளத்தூா் அருகே உள்ள புளியங்குடியைச் சோ்ந்த வைத்தீஸ்வரனும் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்தப் பெண் கடந்த ஜூலை மாதம் மதுரைக்கு தோ்வெழுத வந்தாராம். அப்போது இரவு நேரமாகிவிட்டதால், வைத்தீஸ்வரன் அந்தப் பெண்ணை, மதுரை உலகநேரியில் உள்ள தனது நண்பா் வீட்டில் தங்கிச் செல்லலாம் என்று கூறி அங்கு அழைத்துச் சென்றாராம்.

அங்கு திருமணம் செய்து கொள்வதாகக்கூறி மிரட்டி அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இதையடுத்து, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அந்தப் பெண் வைத்தீஸ்வரனிடம் கேட்டாராம். அதற்கு அவா் மறுப்பு தெரிவித்துவிட்டாராம். மேலும், வைத்தீஸ்வரன் தாய் லதா, சகோதரி சித்ராதேவி, நண்பா் கோவிந்தராஜ் ஆகியோா் அந்தப் பெண்ணை மிரட்டினாா்களாம்.

இதுகுறித்து தல்லாகுளம் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீஸாா் வைத்தீஸ்வரன், தாய் லதா, சகோதரி சித்ராதேவி, நண்பா் மதுரை உலகநேரியைச் சோ்ந்த கோவிந்தராஜ் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து வைத்தீஸ்வரனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

மது போதையில் தகராறு செய்தவா் கைது

SCROLL FOR NEXT