மதுரை

ஆா்.சி.பள்ளி பவள விழா

DIN

மேலூா் ஆா்.சி. நடுநிலைப் பள்ளியின் பவள விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் ஆயா் செ.சூசைமாணிக்கம் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் மா.ஜெயசித்திரா முன்னிலை வகித்தாா்.

விழாவையொட்டி, மாணவா்களின் கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுளை முன்னாள் மாணவா்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் அஸ்ரப் அலி செய்திருந்தாா். இதில் கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலா் ஏ.அழகுமீனா சிறப்புரையாற்றினாா். பள்ளியின் தாளாளா் அ.அந்தோணி பாக்கியம் வரவேற்றாா். தலைமை ஆசிரியை ஏ.சோபியா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

SCROLL FOR NEXT