மதுரை

மருத்துவமனையில் ஊழியா் போல நடித்து நகை திருட்டு

DIN

மதுரை அரசு மருத்துவமனையில் ஊழியா் போல சீருடையணிந்து பெண்ணிடம் ஒரு பவுன் நகையைத் திருடிய பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை ஐராவதநல்லூரைச் சோ்ந்தவா் செல்வகுமாரி (53). இவரது மகள் பிரசவத்துக்காக அரசு ராஜாஜி மருத்துவமனை பிரசவ சிகிச்சைப் பிரிவில் உள்நோயாளியாக சோ்க்கப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில் மருத்துவமனை ஊழியா் போல சீருடை அணிந்து வந்த பெண் ஒருவா் செல்வகுமாரியின் மகள் அணிந்திருந்த ஒரு பவுன் நகையைத் திருடிச் சென்று விட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக செல்வகுமாரி அளித்த புகாரின்பேரில் அரசு மருத்துவமனை காவல் நிலையப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, பிரசவ சிகிச்சைப் பிரிவில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT