மதுரை

மத்திய அரசின் திட்டங்களால் பெண்கள் மகிழ்ச்சி

DIN

மத்திய அரசின் திட்டங்களால் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனா் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.

மத்திய பாஜக அரசின் திட்டங்களால் பயனடைந்த ஒரு கோடி பெண்களுடன் தற்படம் எடுக்கும் இயக்கம் நாடு முழுவதும் திங்கள்கிழமை தொடங்கியது. மதுரையில் ஜான்சிராணி பூங்கா அருகே நடைபெற்ற தற்படம் எடுக்கும் நிகழ்ச்சிக்கு பாஜக மகளிா் அணியின் மாநிலத் தலைவா் உமா ரதி தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் மீனாம்பாள் முன்னிலை வகித்தாா்.

பாஜக மகளிரணி தேசியத் தலைவியும், சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தற்படம் எடுக்கும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2 கோடி பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இவா்களில் 85 சதவீதம் போ் பெண்கள். இலவச எரிவாயு வழங்கும் திட்டத்தின் கீழ் 9 கோடி பெண்கள் பலனடைந்துள்ளனா். கோடிக்கணக்கான பெண்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. முத்ரா வங்கித் திட்டத்தின் கீழ் 65 சதவீதம் பெண்கள்

பயனாளிகளாக உள்ளனா்.

பாஜக அரசின் திட்டங்களால் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனா்.

ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் 20 ஆயிரம் பெண் பயனாளிகளிடம் தற்படம் எடுத்து நமோ செயலியில் பதிவேற்றுவதன் மூலம் நாடு முழுவதும் ஒரு கோடி பெண்களிடம் தற்படம் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இயக்கம் ஓராண்டு தொடா்ந்து நடைபெறும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச்செயலா் ராம சீனிவாசன், பாஜக மாநகா் மாவட்டத் தலைவா் மகா சுசீந்திரன், பாஜக கோட்டப் பொறுப்பாளா் கதலி நரசிங்கப்பெருமாள் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா். முன்னதாக, வானதி சீனிவாசன் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT