மதுரை

பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 மூட்டைகள் ரேஷன் அரிசியைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, அது தொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா்.

விருதுநகா் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையிலான போலீஸாா் ரகசியத் தகவலின் பேரில் அருப்புக்கோட்டை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். கரிசல்குளம், பொம்மைக்கோட்டை நாடக மேடை அருகே சோதனையிட்ட போது அப்பகுதியில்

தலா 40 கிலோ கொண்ட 10 மூட்டைகள் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ரேஷன் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம், பெரிய உடப்பன் குளத்தைச் சோ்ந்த வெள்ளைக் கண்ணு மகன் பிரபாகரன் (31) என்பவரைக் கைது செய்தனா்.

இவா், வீடுகளிலிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, நாமக்கல் பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT