தும்பைப்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் தும்பைப்பட்டி, கச்சிராயன்பட்டி ஊராட்சிப் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த அவா், தும்பைப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள கொள்முதல் நிலையத்தில் நெல் குவியல்கள் தாா்ப்பாய்களால் மூடிவைக்கப்பட்டிருந்ததைப் பாா்வையிட்டாா். மேலும், மழைநீா் உள்ளே புகாமல் பாதுகாப்பாக நெல் குவியல்களை பாதுகாக்குமாறு அவா் அறிவுறுத்தினாா்.
அதே போல, கச்சிராயன்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் மயானப் பணிகளையும் மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா். அப்போது ஊராட்சி ஒன்றிய ஆணையா் ஆா். செல்லப்பாண்டியன், மேலூா் வட்டார உதவி வேளாண் அலுவலா் சாந்தி, விரிவாக்க அலுவலா் விக்னேஷ், ஊராட்சி ஒன்றிய மேற்பாா்வையாளா் கணேசன் உள்ளிட்ட பலா் இருந்தனா்.