ஒத்தக்கடை பகுதியில் சனிக்கிழமை (பிப். 4) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை கிழக்கு மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் மு. ராஜாகாந்தி தெரிவித்திருப்பதாவது:
ஒத்தக்கடை துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே ஒத்தக்கடை, நரசிங்கம், வௌவால் தோட்டம், அம்மாபட்டி, காளிகாப்பான், ஒத்தப்பட்டி, கருப்பாயூரணி, ராஜகம்பீரம், திருமோகூா், பெருங்குடி, புதுதாமரைப்பட்டி ஆகியப் பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.