அழா்கோவிலில் உள்ள கள்ளழகா் கோயிலில் வியாழக்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 41 லட்சம் கிடைத்திருந்தது.
இந்த கோயில் உண்டியல்கள் கோயில் துணை ஆணையா் மு. ராமசாமி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை ஆணையா் சுரேஷ், கண்காணிப்பாளா்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன. அப்போது பக்தா்கள் காணிக்கையாக ரூ. 41 லட்சத்து ஓராயிரத்து 793-ம், தங்கம் 20 கிராமும், வெள்ளி 190 கிராமும் கிடைத்தன.