மதுரை

மாட்டைத் திருடி விற்க முயன்றவா் கைது

DIN

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே பசு மாட்டைத் திருடி சந்தையில் விற்க முயன்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வாடிப்பட்டி அருகே உள்ள சாணாம்பட்டி குரங்குத் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (50). விவசாயியான இவா், வீட்டில் 3 பசு மாடுகளை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில் அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு அவற்றை மாட்டுக் கொட்டகையில் கட்டிவிட்டு தூங்கச் சென்றாா். மறுநாள் திங்கள்கிழமை காலையில் பாா்த்தபோது அவற்றில் ஒன்று திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, வாடிப்பட்டி மாட்டுச் சந்தைக்கு உறவினா்களுடன் சென்று செல்வராஜ், அந்த பசு மாட்டை தேடினாா். அப்போது ஒருவா், அந்த மாட்டை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தாா். இதைத் தொடா்ந்து செல்வராஜ் அளித்தப் புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸாா் அங்கு சென்று மாட்டைத் திருடியவரை காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்தனா். இதில் அவா், ராமநாதபும் மாவட்டம் ராமேசுவரத்தைச் சோ்ந்த ராஜேஷ் (32) என்பதும், கிராமங்களுக்குச் சென்று மாடுகளைத் திருடி சந்தையில் அவா் விற்பதும் தெரிந்தது. பின்னா் போலீஸாா் ராஜேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT