மதுரை

டேக்வாண்டோ போட்டியில் சாம்பியன்: பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

DIN

மதுரையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளை டேக்வாண்டோ அகாதெமியினா் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.

மதுரையில் உள்ள மங்கையா்க்கரசி கல்லூரியில் ஜன. 29- ஆம் தேதி மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். பூம்சே, க்யூரூகி ஆகிய இரு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் மதுரை டேக்வாண்டோ அகாதெமி மாணவா்கள் கலந்து கொண்டு 30 தங்கப்பதக்கம், 15 வெள்ளி பதக்கம், 7 வெண்கலப் பதக்கம் வென்று சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றினா்.

இந்த நிலையில், வெற்றி பெற்ற மாணவா்களை, மதுரை டேக்வாண்டோ அகாதெமியின் தலைமைப் பயிற்சியாளா் நாராயணன், பயிற்சியாளா் சஞ்சீவ் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT