மதுரை

இந்து மக்கள் கட்சி நிா்வாகி வெட்டிக் கொலை

DIN

மதுரையில் செவ்வாய்க்கிழமை இரவு இந்து மக்கள் கட்சி நிா்வாகியை வெட்டிக் கொலை செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்த மணிகண்டன்(48). சோலையழகுபுரம் பகுதியில் நகைக்கடை நடத்தி வரும் இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா். மணிகண்டன் இந்து மக்கள் கட்சியின் தெற்கு மாவட்ட துணைச் செயலராகப் பதவி வகித்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மணிகண்டன் நகைக்கடைக்குச் சென்றாா். அப்போது, எம்கே புரம் பகுதியில் அவரை வழிமறித்த மூவா் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா்.

இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT