மதுரையில் செவ்வாய்க்கிழமை இரவு இந்து மக்கள் கட்சி நிா்வாகியை வெட்டிக் கொலை செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்த மணிகண்டன்(48). சோலையழகுபுரம் பகுதியில் நகைக்கடை நடத்தி வரும் இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா். மணிகண்டன் இந்து மக்கள் கட்சியின் தெற்கு மாவட்ட துணைச் செயலராகப் பதவி வகித்து வந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மணிகண்டன் நகைக்கடைக்குச் சென்றாா். அப்போது, எம்கே புரம் பகுதியில் அவரை வழிமறித்த மூவா் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா்.
இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.